திருப்புமுனை படத்துக்கு காத்திருக்கும் பூஜா ஹெக்டே

மும்பை: தென்னிந்திய படவுலகிலும், பாலிவுட்டிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், பூஜா ஹெக்டே. அவருக்கு கடந்த 3 வருடங்களாக மிகப்பெரிய ஹிட் படம் எதுவும் அமையவில்லை. கடந்த 2024ல் அவரது நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. கடந்த ஆண்டு சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், பூஜா ஹெக்டேவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. தற்போது ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ என்ற படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார்.

ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக படம் இன்னும் திரைக்கு வரவில்லை. தற்போது தெலுங்கு உள்பட மற்ற மொழிகளில் சேர்த்து 2 படங்களில் மட்டுமே பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில், சர்வானந்த் நடிக்கும் புதிய படத்தில் அவர் ஹீரோயினாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீனு வைட்லா இயக்கும் இப்படத்துக்கு ‘ஜார்ஜ் கிரிஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படம் பூஜா ஹெக்டேவுக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது.

Related Stories: