14ம் தேதி ரிலீசாகும் ‘ட்ரீம் கேர்ள்’

சாருலதா பிலிம்ஸ் தயாரிக்க, எம்.ஆர்.பாரதி கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘ட்ரீம் கேர்ள்’. ஜீவா, ஹரிஷ்மிதா, பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா நடித்துள்ளனர். சாலமன் போவாஸ் இளமாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம்.டி.தமிழரசன் வசனம் எழுதியுள்ளனர். எஸ்.ரதி தயாரிப்பு வடிவமைப்பு பொறுப்பு ஏற்க, எம்.டி.தமிழரசன் கிருத்திகா தாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். எஸ்.பி.அஹமத் எடிட்டிங் செய்துள்ளார். என்.காவேரி மாணிக்கம், டாக்டர் ஆர்.குணசேகரன், பி.ஆதித்யன் இணை தயாரிப்பு ெபாறுப்பு ஏற்றுள்ளனர். படம் குறித்து எம்.ஆர்.பாரதி கூறுகையில், ‘திரைப்படம் இயக்க வேண்டும் என்பது ஹீரோவின் கனவு.

பின்னணி பாடகியாக வேண்டும் என்பது ஹீரோயின் கனவு. இருவரும் காதலிக்கின்றனர். அவர்களின் கனவு பலித்ததா என்பது கதை. மசாலா கலப்பில்லாத முழுமையான காதல் கதையில் வில்லன் கிடையாது. ஆனால், அவர்களின் கனவுதான் வில்லன். ஊட்டியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இதற்கு முன்பு நான் ‘அழியாத கோலங்கள் 2’ என்ற படத்தை இயக்கி, 12 நாட்களில் படப்பிடிப்பை முடித்தேன். ‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் கதை அழுத்தமாக இருப்பதால், ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. காதலர் தினமான வரும் 14ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வருகிறோம்’ என்றார்.

Related Stories: