×

கொங்கணாபுரம் சந்தையில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம்: 13,500 ஆடுகள் விற்பனை

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் வாரச்சந்தை இன்று கூடியது. சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 13,500 ஆடுகள், 2,300 பந்தய சேவல் மற்றும் கோழி, 1.30 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடு, கோழிகளை வாங்கி சென்றனர்.

10 கிலோ முதல் 40 கிலோ வரை எடை உள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.6000 முதல் ரூ.39,000 வரை விலை போனது. பந்தய சேவல் ரூ.2500 முதல் ரூ.3500 வரை விற்கப்பட்டது. ஆடி பண்டிகையையொட்டி ஆடு, கோழிகள் விற்பனை அதிகாலை முதலே களைகட்டியது. சந்தையில் இன்று ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் காய்கறிகளின் விற்பனையும் களைகட்டியது.

The post கொங்கணாபுரம் சந்தையில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம்: 13,500 ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Konganapuram ,Idappadi ,Salem ,Namakkal ,Erode ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...