சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜனவரி 14 முதல் 18ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜன.14 முதல் 18 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, சனி, ஞாயிறு என 5 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
