மாவட்ட மைய நூலகத்தில் இன்று யோகா பயிற்சி

திருச்சி,ஜூலை 17: மாவட்ட மைய நூலகத்தில் இன்று யோகா பயிற்சி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி மாவட்ட மைய நூலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்பயிற்சியை யோகா ஆசிரியர் முருகேஸ்வரி வழங்க உள்ளார். தொடர்ந்து மாதத்தின் 3வது (ஞாயிற்றுக்கிழமை) ஜூலை.20 காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை குழந்தைகளுக்கான ஓவியப்பயிற்சி நடைபெற உள்ளது. ஓவிய ஆசிரியர் பெருமாள் பயிற்சி வழங்க உள்ளார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட மைய நூலகத்தில் இன்று யோகா பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: