துவரங்குறிச்சி, மே. 1: காரைப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே காரைப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக கடந்த 19ம்தேதி பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு பத்து நாள் திருவிழாக் கொண்டாடப்பட்டது. பின்னர் கோவில் முன் கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் வைபோகம் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நேற்றுமுன்தினம் முத்து மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்றது. பூக்குளியில் காப்பு கட்டிய பக்தர்கள் பூ குண்டத்தில் தொடர்ந்து மூன்று முறை இறங்கி சாமி தரிசனம் செய்தனர். காரைப்பட்டி சுற்றியுள்ள அனைத்து கிராம பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.
