திருச்சி அடுத்த முசிறி மகா மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா

முசிறி, ஏப்.25: முசிறியில் மகா மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து வருதல் ஆண்டவர் அழைத்தல் சக்தி கரகம் பாலித்தல் திருத்தேர் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மூலவர் மகாமாரியம்மன் தினசரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். திருத்தேர் நிகழ்ச்சியில் திருத்தேரில் எழுந்தருளிய மகா மாரியம்மன் முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை முன்னிட்டு நேற்று பழ வகைகள் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

 

Related Stories: