திருச்சி ரயில்வே மருத்துவமனையில் உலக தடுப்பூசி வார விழா

திருச்சி, மே 1: திருச்சி கோட்ட ரயில்வே மருத்துவமனையில் உலக தடுப்பூசி வார விழா நடைபெற்றது. பொன்மலை ரயில்வே மருத்துவமனை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் உலகநாதன், சுகாதாரம், குடும்பநல கோட்ட மருத்துவ அலுவலர் கிருத்திகா ஆகியோர் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில் டெட்டானஸ், டிப்திரியா, ஹெப்பாடைடிஸ் பி, ஹீமோபில்ஸ், நிமோனியா, போலியோ, ரூபெல்லா உள்ளிட்ட தடுப்பூசிகளின் சிறப்பு குறித்து விளக்கப்பட்டது. ஒவ்வொரு புதன் கிழமையும் இந்த தடுப்பூசி இங்கு போடப்படுகிறது. கடந்த ஆண்டு 650 குழந்தைகளுக்கு 946 தடுப்பூசிகள் போடப்பட்டது.

 

Related Stories: