திருச்சி, ஏப்.29: திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஏப்.27ம்தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மில் காலனி கோனார்குளம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சுமதி (62) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 220 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
