பைக் மோதி மூதாட்டி பலி

 

கரூர், ஜூலை 8: கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாயி (80). இவர், கடந்த 5ம்தேதி மாலை புலியூர் ஆசிரியர் காலனி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் மூதாட்டி மீது மோதியதில் படுகாயமடைந்தார். அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மூதாட்டி ராமாயியை கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பசுபதிபாளையம் போலீசார் வழ க்கு பதிந்து விசாரணைமேற் கொண்டு வருகின்றனர்.

The post பைக் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: