தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ேமாதி ஒருவர் பலி

கயத்தாறு, ஜூலை 25: கயத்தாறு அருகேயுள்ள மதுரை – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசன்குளம் விலக்கு அருகே நேற்று காலை வாகனம் மோதிய விபத்தில் ஆண் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு உடல் முழுவதும் நசுங்கிய நிலையில் சாலை ஆங்காங்கே எலும்புகள், ரத்தம் படிந்த உடல் பாகங்கள் சிதறி கிடந்தன.

அவற்றினை வெகு சிரமப்பட்டு சேகரித்த போலீசார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர் யார்? அவர் மீது மோதி சென்ற வாகனம் எது போன்ற விவரங்கள் தெரியவில்லை. விபத்து குறித்து கயத்தாறு எஸ்ஐ ஆர்தர் ஜஸ்டின் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ேமாதி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: