ஓசூர், ஜூலை 22: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதை கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவாயில் முன்பு, திமுக மாணவரணி சார்பில் பிரசாரம் நடந்தது.
மாணவரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, டேக்ஸ் கமிட்டி தலைவர் சென்னீரப்பா, துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்குப் பகுதி மாணவரணி அமைப்பாளர் அருண், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் முகமது ஷெரீப், பிரவீன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஓரணியில் தமிழ்நாடு துண்டு பிரசுரம் விநியோகம் appeared first on Dinakaran.
