பழைய ஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேகம்

கிருஷ்ணராயபுரம், ஜூலை 22: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்  ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான  ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேகத்தை முன்னிட்டு யாக வேள்வி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன்,நெய், பழங்கள், கரும்பு சாறு, இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, காவிரி தீர்த்தம் போன்ற 13 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பழைய ஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: