குமரியில் கரை ஒதுங்கிய கண்டெய்னரில் இருந்து வெளியேறிய பொருட்களை எடுத்துச் செல்லும் மக்கள்

கன்னியாகுமரி: குமரியில் கரை ஒதுங்கிய கண்டெய்னரில் இருந்து தேக்கு தடிகளை மக்கள் எடுத்துச் செல்கின்றனர். கேரளா மாநிலம், கொச்சி அருகே அரபிக்கடலில் லைபீரியா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் 634 கண்டெய்னர்களுடன் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய கண்டெய்னர்கள் கேரள கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கி வருகிறது. அந்த வகையில் கன்டெய்னர்களில் ஒன்று கன்னியாகுமரி அருகே கரை ஒதுங்கியது. கன்னியாகுமரி அருகே வாணியக்குடியில் கடற்கரையோரம் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. ரசாயன பொருள் ஏற்கனவே வெளியேறிய நிலையில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது.

கண்டெய்னரில் இருந்து வெளியேறிய பொருட்கள் சின்னவிளை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய தேக்கு தடிகள், முந்திரி பருப்பு கொட்டைகளை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எடுத்துச் செல்கின்றனர். கண்டெய்னரில் இருந்து ஓவியம் தீட்டும் உயர் ரக காகிதங்களும் கரை ஒதுங்கியுள்ளன. கடலில் கரை ஒதுங்கும் எந்தவித பொருளையும் மீனவர்கள் தொடக்கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் இணையம் சின்னவிளை மீனவ கிராமத்தில் கரையோரம் ஒதுங்கிய ரசாயன கண்டைனர் குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

The post குமரியில் கரை ஒதுங்கிய கண்டெய்னரில் இருந்து வெளியேறிய பொருட்களை எடுத்துச் செல்லும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: