சென்னை: திருவண்ணாமலை கோயில் தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டார். ஆக்கிரமிப்பு கட்டுமானங்களில் இருந்து மனிதக் கழிவு குளத்தில் திறந்து விடப்படுவதாக யானை ராஜேந்திரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்புகளை அரசு கண்டறிந்து 46 வாரம் கடந்தும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐகோர்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு எந்த ஆவணத்தின்படி மின் இணைப்பு தரப்பட்டது என மின்வாரியம் பதில் தர ஆணையிட்ட நிலையில், வழக்கின் விசாரணையை ஜூன் 26ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.
The post திருவண்ணாமலை கோயில் தாமரை குளம் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.