உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை

 

சென்னை, மே 27: சென்னையில் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
கொளத்தூர், முருகன் நகர், 7வது தெருவை சேர்ந்தவர் பசுபதி. இவர் விபத்தில் சிக்கி, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அப்போது, பசுபதியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் பசுபதியின் கல்லீரல் தானமாக பெறப்பட்டது.
தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி உடல் உறுப்பு தானம் செய்த பசுபதியின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் மற்றும் அயனாவரம் வட்டாட்சியர் வனிதா ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அப்போது காவல் துறையினர், உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: