இரவு முழுவதும் நகரங்களில் வான்வழித்தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 7 மணி நேரம் உக்ரைன் ராணுவத்தினால் தாக்குதல் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சத்தம் தொடர்ந்ததாக தெரிகின்றது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் ரயில்நிலையங்களில் உள்ள சுரங்கபாதைகளில் தஞ்சம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,சோலோமியன்ஸ்கி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பினால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
The post கீவ் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல்: இரவு முழுவதும் தொடர்ந்த குண்டுவெடிப்பு சத்தம் appeared first on Dinakaran.