தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக, இருவேறு பிரிவினருக்கு பல வருடமாக பிரச்னை ஏற்பட்டு, தற்போது ஒற்றுமையுடன் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜ கட்சியினர் ஏற்பாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டதேவி தேர் குறித்து நேற்று மாலை நூல் வெளியிடுவார் எனக்கூறி ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு 192 கிராமங்களை உள்ளடக்கிய நான்கு நாட்டார்கள், வரலாற்றை திரித்து எழுதிய நூலை ஆளுநர் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து நூல் வெளியீடு விழாவை பாஜவினர் சமூக மத நல்லிணக்க கூட்டம் என அறிவித்தனர். நேற்று மாலை கண்டதேவி கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். பின்னர் தேவகோட்டை தனியார் மண்டபத்தில் சமுதாய நல்லிணக்கக் கூட்டத்தில் பேசிச் சென்றார். நான்கு நாட்டார்கள் 192 கிராம பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக நூலை வெளியிடாமல் ஆளுநர் திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.
The post 192 கிராம மக்கள் எதிர்ப்பு நூலை வெளியிடாமல் சென்றார் ஆளுநர் appeared first on Dinakaran.