அண்ணாமலைக்கும், நயினாருக்கும் மோதல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் விடுதியில் தங்கியிருந்த அமித்ஷாவை அண்ணாமலை தனியாகவும், நயினார் நாகேந்திரன் தனியாக சந்தித்தனர். மேலும் அமித்ஷா மதுரை வந்த முதல்நாளில் அவரை வரவேற்க அண்ணாமலை வராததும் கட்சியினர் மத்தியில் பேசு பொருளாக மாறியது. தனது காரில் கட்சிக் கொடி இன்றி அண்ணாமலை விடுதிக்கு வந்திருந்ததும் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், நிர்வாகிகள் கூட்டத்திலும் அண்ணாமலையை குறிவைத்தே நிர்வாகிகள் ஆர்ப்பரித்து உற்சாகம் நிறைத்துள்ளனர். பாஜ மாநிலத்தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாளர்களின் இந்த தொடர் முழக்கம் புதிய மாநிலத்தலைவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது.
The post அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்த அண்ணாமலை, நயினார்: மோதல் காரணமா? appeared first on Dinakaran.