வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

தேன்கனிக்கோட்டை, மே 22: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பசப்பன் (50) விவசாயி. இவர், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக அஞ்செட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில் போலீசார், பசப்பனின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், பசப்பனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து உரிமமின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக பசப்பனை கைது செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது appeared first on Dinakaran.

Related Stories: