அடிப்படை அறிவில்லாதவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது சாபக்கேடு: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு


சென்னை: இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கை: ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம் என பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 2031 சட்டமன்றத் தேர்தல் வரையில் பாஜவோடு கூட்டணி இல்லை எனப் பேசிய வீராதி வீரர் யார்? தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளுக்கு டெல்லி செல்லாத நீங்கள், உங்கள் மகன் மிதுனுக்காக தானே அமித்ஷாவை போய் பார்த்தீர்கள். ரெய்டில் குடும்பம் சிக்கி விடக் கூடாது என்பதற்காகத் தானே பாஜவோடு கூட்டணி வைத்தீர்கள். வெள்ளைக் கொடியை அல்ல, காவிக் கொடியை ஏந்திக் கொண்டு போனார். படுத்தே விட்டாரய்யா என்ற சொற்களுக்கு உருவமே கூவத்தூர் எடப்பாடி பழனிசாமி தான். முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்குத் தான் செல்கிறார். அமித்ஷா வீட்டுக்கு அல்ல என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு.

பாஜவின் பாசிச அரசியலுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை உலகறியும். பொள்ளாச்சி தொடங்கி அண்ணாநகர் பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த பழனிசாமி, பெண்களுக்குத் தற்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என விஷமப் பிரச்சாரத்தைச் செய்து மடைமாற்றலாம் என மடத்தனமான அரசியல் செய்தால் மக்கள் நம்பிவிடுவார்களா?

The post அடிப்படை அறிவில்லாதவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது சாபக்கேடு: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: