அப்போது காரின் அனைத்து கதவுகளும் ‘ஆட்டோ லாக்’ ஆனது. இதனால் 4 சிறுவர், சிறுமிகள் மூச்சுத்திணறி அலறியுள்ளனர். ஆனால் அருகே உள்ள வீட்டில் திருமண விழா என்பதால் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பு செய்ததால் யாருக்கும் இவர்களது சத்தம் கேட்கவில்லை. இதற்கிடையில் மாலை வரை வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். மாலை 5.30 மணியளவில், ஒரு கட்டுமான தொழிலாளி காரின் அருகே சென்று ‘சைடு கண்ணாடியில்’ முகம் பார்த்துள்ளார்.
அப்போது காருக்குள் குழந்தைகள் அசையாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளூர்வாசிகள் மற்றும் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து கண்ணாடிகளை உடைத்து பார்த்தபோது அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனடியாக அவர்களை விஜயநகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், 4 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட பெற்றோர் கதறி அழுதனர். குட்டையில் மூழ்கி சோகம்: சித்தூர் மாவட்டம், குப்பம் தேவராஜபுரத்தில், 3 குழந்தைகளும், மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடேமில் ஜல்லேறு நீர்த்தேக்கத்தில் சிறுவர்கள் 2 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.
The post ஆந்திராவில் ஒரே நாளில் 3 இடங்களில் சோகம் காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி: நீரில் மூழ்கிய 5 சிறுவர்களும் சாவு appeared first on Dinakaran.