அவர்கள் இந்திய ராணுவ மையங்கள், மத வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் வசிக்கும் இடங்களை இலக்குகளாக வைத்து குறிவைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இவற்றில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் பாகிஸ்தானின் மிக முக்கியமான இலக்காக இருக்கும் என்று எங்களுக்கு தோன்றியது. எனவே பொற்கோயிலுக்கு முழுமையான வான் பாதுகாப்பு அமைப்பை வழங்க கூடுதல் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை நாங்கள் நிறுவினோம். பாக். தாக்குதலை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழுமையாகத் தயாராக இருந்தது. இதனால் அனைத்து உள்வரும் அச்சுறுத்தல்களையும் தடுத்து அழித்தது ’ என்று தெரிவித்தார்.
The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பொற்கோயிலை குறிவைத்த பாக். படைகள்: ராணுவம் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.