டெல்லி: மதுரையில் டைடல் பார்க் அமைப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீர்நிலைகள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் மயில்சாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 44 ஆண்டுகளுக்கு முன்னர் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளதே, அப்படி இருக்கையில் இதை நீர்நிலை என எப்படி கருத முடியும்?. மனுவை ஏற்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி கவாய் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
The post மதுரையில் டைடல் பார்க் அமைப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்! appeared first on Dinakaran.