கிழக்கு-மேற்கு காற்று இணைவதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கிழக்கு, மேற்கு காற்று இணையும் நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, வங்கக் கடலில் உள்ள காற்று சுழற்சி தமிழகத்தை நெருங்கி இருப்பதால், ஈரோடு, பகுதியில் மதியம் மழை பெய்தது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர் மேற்கு பகுதிகளில் நேற்று மதியம் மழை பெய்தது.

இன்றைய வானிலையை பொருத்தவரையில் சென்னை, திருவள்ளூர் பகுதியில் அதிகாலையிலும் மாலை, இரவு ேநரங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்த மழை இன்றும் நாளையும் தொடரும். ஈரோடு, நீலகிரி, கேரளப் பகுதி வழியாக வயநாடு குடகுப்பகுதியாக நுழைந்து மருதமலைப் பகுதியில் நுழையும் என்பதால் திருப்பதி முதல் கன்னியாகுமரி வரையில் இன்று மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அத்துடன் பாலக்காட்டு கணவாய் வழியாக குளிர்விக்கும் காற்றும், மேற்கு திசை காற்றும், வடக்கு திசைக் காற்றும் நுழையும் என்பதால், கோவை, திருப்பூ,ர் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, தாராபுரம் பகுதியில் மடத்துக்குளம், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கரூர் மாவட்டப்பகுதிகளில் மழை பெய்யும்.

ஆந்திர எல்லையோரம், வங்கக் கடலோரம், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களுக்கும் மழை பெய்யும். இந்த மழை இன்று மதியமே தொடங்கி நாளை அதிகாலை வரையில் பெய்யும். இது 20ம் தேதி வரை நீடிக்கும். இந்த மழையின் போது அதிகபட்சமாக 150 மிமீ வரை மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 21ம் தேதி மேற்கு மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் எங்கும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. நீடித்து நின்று விடிய விடிய 19, 20, 21ம் தேதிகளில் மழை பெய்யும்.

The post கிழக்கு-மேற்கு காற்று இணைவதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: