ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப நகர்ப்புற சுகாதார மையங்களில் நிரந்தர மருத்துவர்கள் தங்கள் பணியை தொடங்குவார்கள். முன்னதாக, சென்னை மாநகராட்சியில் ஆரம்ப நகர்ப்புற சுகாதார மையங்களில் தற்காலிக மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஒப்பந்தத்தில் உள்ள மருத்துவர்களுக்கு போதுமான அளவு சம்பளம் இல்லாத காரணத்தினால் வேலையை விட்டு சென்றுவிடுகின்றனர். தற்போது நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்படுவதால் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கும்.
சென்னை போன்ற பெருநகரத்தில் மருத்துவமனையில் பணியாற்றுவது அநேகமாக பல மருத்துவர்களுக்கு கனவாக கூட இருக்கும். மேலும் புதிய மருத்துவர்கள் நீண்ட நாட்களுக்கு ஒரே மருத்துவமனையில் பணியாற்றவும் வாய்ப்புள்ளது. இதனால் நோயாளிகள் ஒரே மருத்துவரைப் பின்பற்றி சிகிச்சை பெற்வர். இது பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சென்னை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் 150 டாக்டர்கள் நியமனம் appeared first on Dinakaran.