திருப்பூர் மாவட்டத்தில் 4 மாவட்ட செயலாளர்கள். 4 மாவட்ட தலைவர்கள், ஒரு வன்னியர் சங்க மாநில செயலாளர் பதவிகளுக்கான நியமன கடிதங்களை ராமதாஸ் இன்று வழங்கினார். இதனை தொடர்ந்து நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த பாமக புதிய பொருளாளர் சையத் மன்சூர் உசேன் கூறியதாவது: பாமகவில் நிறுவனர் ராமதாசின் நியமனம் மட்டுமே செல்லும். அவருக்கு மட்டுமே முழு அதிகாரம். உள்ளது. திலகபாமாக பொருளாளர் என குறிப்பிடமுடியாது. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கையை ராமதாஸ் எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
The post திலகபாமா மீது சட்டப்படி நடவடிக்கை; பாமகவில் ராமதாசின் நியமனம் மட்டுமே செல்லும்: புதிய பொருளாளர் சையத் மன்சூர் உசேன் அறிவிப்பு appeared first on Dinakaran.