அருணாச்சலப்பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் லேசான நிலநடுக்கம்!

அருணாச்சலப்பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் அதிகாலை 5.06 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சுமத்ராவில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post அருணாச்சலப்பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: