வாலாஜா: காற்றுடன் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவர் பலியானதால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இந்நிலையில் வாலாஜா அடுத்த மருதாலம் பஜனை கோயில் ெதருவை சேர்ந்த விவசாயி முருகன்(38), நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது தெருவில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்த முருகன், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரத்தை துண்டித்தனர். இதையடுத்து வாலாஜா போலீசார், முருகனின் சடலத்தை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தகவலறிந்த முருகன் மனைவி திவ்யா(33) அதிர்ச்சியடைந்து, மகன் திராவிட்(8) மற்றும் மகள் மித்ரா(5) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post காற்றுடன் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவர் பரிதாப பலி: 2 குழந்தைகளுடன் மனைவி விஷம் குடித்தார் appeared first on Dinakaran.