கோவை வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி: கேரள இளைஞர்கள் 3 பேர் கைது

கோவை, மே 17: கோவை ஜெம் நகர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருக்கு, கடந்த மார்ச் 6ம் தேதி தன் டெலிகிராம் செயலிக்கு ஒரு இணையதள முகவரியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறிஞ்செய்தியில் பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்தும், அதில் தனியார் கம்பெனி சொத்துக்களை பிரமோட் செய்தால் ரூ.900 முதல் ரூ.2500 வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பு, ஒரு இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த வாலிபர், குறுஞ்செய்தியில் இருந்த இணையதள முகவரியில் தன் விவரங்களை குறித்து பதிவு செய்து சொத்துக்களை பிரமோட் செய்தார். முதல் நாளில் அந்த இளைஞருக்கு ரூ.872 கிடைத்துள்ளது. மேலும், அவருக்கு வந்த குறுஞ்செய்தியில் பல்வேறு ஸ்கீம்கள் இருந்துள்ளது. குறிப்பிட்ட பணத்தை செலுத்தி அந்த ஸ்கீம்களில் சேர்ந்தால் அதிக லாபம் மற்றும் கமிஷன்கள் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பிய அந்த வாலிபர் பல்வேறு தவனைகளில் பல்வேறு வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.6,80,684 செலுத்தியுள்ளார்.ஆனால் அவர் எதிர்பார்த்த கமிஷன் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த வாலிபர் உடனடியாக கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் இந்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது வாலிபரை ஏமாற்றியது, கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்து கிருஷ்ணன் (20), டி.எஸ் விஷ்ணு (28), பி.எஸ். சுஜித் (25) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ஆனந்து கிருஷ்ணன், டி.எஸ் விஷ்ணு, பி.எஸ். சுஜித் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கோவை வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி: கேரள இளைஞர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: