24ம் தேதி பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் ஆட்சி குழு கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பேசப்படும் விவரங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான ஆட்சி குழுவில் முதல்வர்கள்,யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். நிதி ஆயோக்கின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.

The post 24ம் தேதி பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: