டாக்டருக்கு பதில் செவிலியர் ஊசி போட்டார்; கர்ப்பிணியின் வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறப்பு: தனியார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு


தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (31). இவர் பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் நந்தினி கர்ப்பமடைந்தார். பிரசவத்திற்காக கடந்த மார்ச் 20ம் தேதி, தர்மபுரி பூங்கா அருகே தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது நந்தினிக்கு, மருத்துவருக்கு பதிலாக செவிலியர் ஊசி போட்டுள்ளார். அப்போதில் இருந்து நந்தினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்த்தனர்.

பரிசோதனையில் வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறந்திருந்தது. நந்தினி நலமாக உள்ளார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்ேடஷனில் அருண்குமார் புகார் அளித்தார். அதில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களின் அஜாக்கிரதையால் வயிற்றிலேயே குழந்தைகள் இறந்துவிட்டது என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர், செவிலியர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டாக்டருக்கு பதில் செவிலியர் ஊசி போட்டார்; கர்ப்பிணியின் வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறப்பு: தனியார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: