இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுராந்தகம், மே 16: மதுராந்தகம் மின்வாரிய அலுவலகத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், நுகர்வோர் தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் செயற்பொறியாளர் அக்னி முத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (16ம் தேதி) காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் செயற்பொறியாளர் அக்னி முத்து தலைமையில் நடைபெறுகிறது. இதில், மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பிரிவு அலுவலகங்களான செய்யூர், கூவத்தூர், கடப்பாக்கம், கடுகுபட்டு, மதுராந்தகம், வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த நுகர்வோர் தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: