சென்னையில் இந்த நவீன சிகிச்சை கிடைக்குமாறு செய்திருப்பதன் மூலம் பெருநகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியமாக இருக்கிற தென்னிந்தியாவைச் சேர்ந்த நோயாளிகள் அதிகமாக பயனடைவார்கள். சிமெரிக் ஆன்டிஜென் ரிசெப்டர் டி-செல் சிகிச்சை என்பது புற்றுநோயை எதிர்த்து போரிட டி-செல்கள் என அழைக்கப்படும் நோயாளியின் சொந்த நோய் எதிர்ப்புத்திறன் செல்களை பயன்படுத்துகிற நோயெதிர்ப்பு சிகிச்சையின் ஒரு வகையாகும். நோயாளியின் சொந்த ரத்தத்தில் இருந்து இந்த டி-செல்களை மருத்துவர்கள் எடுத்து, புற்றுநோய் செல்களை சிறப்பாக அடையாளம் கண்டு அவைகளை தாக்குவதற்கு ஏற்றவாறு பரிசோதனையகத்தில் மறுவடிவாக்கம் செய்கின்றனர்.
இந்த மறுவடிவாக்க செயல்முறைக்கு பிறகு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டி-செல்கள் நோயாளியின் உடலுக்குள் உட்செலுத்தப்படுகின்றனர். அங்கு, பரவியிருக்கும் புற்றுநோய் செல்களை இவைகள் அடையாளம் கண்டு அழிக்கும்.
உள்நாட்டிலேயே இப்போது கிடைக்கும் இந்த நவீன முன்னேற்றத்தின் மூலம் ரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு அணுகுமுறையை இது மறுவரையறை செய்கிறது; இதன் மூலம் ஒரு காலத்தில் கிடைக்கப்பெறாமல் இருந்த உலகத்தரம் வாய்ந்த, துல்லியமான இலக்கை குறிவைக்கும் சிகிச்சையின் மூலம் இந்தியாவிலுள்ள நோயாளிகளுக்கு சிறப்பான பயனளிக்கும் சிகிச்சையை இப்போது நாங்கள் வழங்குகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
The post காவேரி மருத்துவமனையில் சிமெரிக் ஆன்டிஜென் ரிசெப்டர் டி-செல் சிகிச்சை திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.