தமிழ்நாட்டில் நாளை முதல் வெப்பச் சலனத்தால் மழை பெய்வது தீவிரமடையும்: டெல்டா வெதர்மேன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் வெப்பச் சலனத்தால் மழை பெய்வது தீவிரமடையும் என டெல்டா வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். கேரளாவில் மே 25ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். மேலும், தெற்கு அந்தமான் கடலில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள், நிகோபார் தீவுகளில் பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவு, குமரிக்கடல் பகுதியில் அடுத்தடுத்து பருவமழை தொடங்கக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14ம் தேதி: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மே 15ம் தேதி: நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மே 16ம் தேதி: கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளை முதல் வெப்பச் சலனத்தால் மழை பெய்வது தீவிரமடையும்: டெல்டா வெதர்மேன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: