சேலம், மே 13: சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சேலம் மாநகராட்சியின் நங்கவள்ளி நீரேற்றும் மையத்தில் இயங்கி வரும் மோட்டார்களில் பராமரிப்பு பணிகள் இன்று (13ம் தேதி) நடக்கிறது. இதனால், மாநகராட்சிப் பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது,’ என அதில் தெரிவித்துள்ளார்.
The post இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.