அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்

கிருஷ்ணகிரி, மே 11:சூர் தாலுகா தொழுவமலை அடுத்த டி.பாறையூர் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம்(9ம் தேதி) மாலை 6.30 மணியளவில் 108 ஆம்புலன்சிற்கு அவசர அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து சென்று, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த சம்பங்கியம்மாள்(23) என்பவரை மீட்டனர். பின்னர், அவரை ஆம்புலன்சில் ஏற்றினர். உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் பறந்தது. தொழுவமலை வனப்பகுதியில் சென்றபோது, சம்பங்கியம்மாளுக்கு பிரசவ வலி அதிகமானதால், ஓட்டுனர் சிவக்குமார், ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தினார்.

தொடர்ந்து மருத்துவ உதவியாளர் திருவேணி, சம்பங்கியம்மாளுக்கு பிரசவம் பார்த்தார். அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை சுக பிரசவமாக பிறந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தாயும்- சேயும் உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அடர்ந்த வனப்பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சுகப்பிரசவத்தில் இளம்பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம் appeared first on Dinakaran.

Related Stories: