3/4கப்சோள மாவு
1கப்சர்க்கரை
1சிட்டிகைகுங்குமப்பூ
12முந்திரி
3 டேபிள் ஸ்பூன்நெய்
11/2கப்தண்ணீர்
செய்முறை:
சோள மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.வெது வெதுப்பான தண்ணீரில் குங்குமப்பூவை கரைத்துக் கொள்ளவும்.கடாயில் நெய் காய்ந்ததும், முந்திரியை சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.அதே நெய்யில் சர்க்கரையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கரைந்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து கெட்டியானால் போதும். பாகு பதம் தேவையில்லை. சோள மாவு கரைசலை அடுப்பை சிறியதில் வைத்து ஊற்றி கட்டியில்லாமல் கிளறவும்.பிறகு குங்குமப்பூ கரைசலை விடவும்.சற்று கெட்டியானதும் நெய் சிறிது விடவும்.பிறகு வறுத்த முந்திரியை போடவும்.நன்கு கிளறவும்.சிறிது நெய் விடவும்.எல்லாம் ஒன்றாக சேர்ந்து கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.இப்போது மிகவும் சுவையான,சுலபமான, பாம்பே கராச்சி அல்வா தயார்.
The post பாம்பே கராச்சி அல்வா appeared first on Dinakaran.