நான் இல்லாத போது நடந்த காங்கிரசின் எல்லா தவறுக்கும் பொறுப்பேற்கிறேன்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பதில்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்று வந்தார். அந்த பயணத்தில், கடந்த மாதம் 21ம் தேதி பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள வாட்சன் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் அண்ட் பப்ளிக் அப்பயர்சில் நடந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடனான கலந்துரையாடலில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது ஒரு சீக்கிய மாணவர், 1984ல் நடந்த சீக்கிய கலவரம் குறித்து கேள்வி கேட்டார். மேலும், ராகுல் காந்தி தனது முந்தைய அமெரிக்க பயணத்தின் போது ‘இந்தியாவில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது குறித்து நான் போராடி வருகிறேன்’ என கூறியதை குறிப்பிட்டு சீக்கியர்கள் மத்தியில் உள்ள அச்சம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘சீக்கியர்களை எதுவும் பயமுறுத்துவதாக நான் நினைக்கவில்லை. மக்கள் தங்கள் மதத்தை வெளிப்படுவத்துவதற்கு சங்கடமாக இருக்கும் இந்தியாவை நாம் விரும்புகிறோமா? என்பதுதான் நான் கூற வந்தது. அதே போல, 1980களில் காங்கிரசில் நடந்த பல தவறுகளின் போது நான் அங்கு இல்லை. ஆனாலும் காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை செய்த தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 1980களில் நடந்த சம்பவங்கள் தவறு என்று ஏற்கனவே நான் பகிரங்கமாக கூறி உள்ளேன். பலமுறை பொற்கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இந்தியாவில் உள்ள சீக்கிய சமூகத்துடன் எனக்கு நல்ல உறவு உள்ளது’’ என்றார். இந்த கலந்துரையாடலில் கடவுள் ராமரை புராணக் கதை என ராகுல் குறிப்பிட்டதற்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.

 

The post நான் இல்லாத போது நடந்த காங்கிரசின் எல்லா தவறுக்கும் பொறுப்பேற்கிறேன்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பதில் appeared first on Dinakaran.

Related Stories: