இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘சீக்கியர்களை எதுவும் பயமுறுத்துவதாக நான் நினைக்கவில்லை. மக்கள் தங்கள் மதத்தை வெளிப்படுவத்துவதற்கு சங்கடமாக இருக்கும் இந்தியாவை நாம் விரும்புகிறோமா? என்பதுதான் நான் கூற வந்தது. அதே போல, 1980களில் காங்கிரசில் நடந்த பல தவறுகளின் போது நான் அங்கு இல்லை. ஆனாலும் காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை செய்த தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 1980களில் நடந்த சம்பவங்கள் தவறு என்று ஏற்கனவே நான் பகிரங்கமாக கூறி உள்ளேன். பலமுறை பொற்கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இந்தியாவில் உள்ள சீக்கிய சமூகத்துடன் எனக்கு நல்ல உறவு உள்ளது’’ என்றார். இந்த கலந்துரையாடலில் கடவுள் ராமரை புராணக் கதை என ராகுல் குறிப்பிட்டதற்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.
The post நான் இல்லாத போது நடந்த காங்கிரசின் எல்லா தவறுக்கும் பொறுப்பேற்கிறேன்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பதில் appeared first on Dinakaran.