சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது..!!

சென்னை: சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில், சென்னை குன்றத்துார் மற்றும் மாங்காடு பகுதியில், சட்ட விரோதமாக பதுங்கி இருந்த, வங்கதேசத்தை சேர்ந்த, 33 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்கிய வங்கதேசத்தினர், 33 பேரில், 25 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். எட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அகரமேல் பகுதியில் ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் தங்கியிருந்த‌து கண்டுபிடிக்கப்பட்டது. வாடகை வீட்டில் தங்கியிருந்து, சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரிக்கும் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் குன்றத்தூர், இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தினர் 33 பேர் கைது செய்யப்பட்டதைத் நிலையில் தற்போது மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: