இந்நிலையில், கலில் ரகுமான், பெற்றோருக்கு போன் செய்து வெளியூரில் வாலிபால் போட்டி இருப்பதால் மாணவியை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் பெற்றோர் மகளை அனுப்ப மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக கலில் ரகுமான், திருவாரூர் சைல்டு லைனுக்கு போன் செய்து நன்றாக விளையாடும் மாணவியை அவரது பெற்றோர் விளையாட அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவுதாக புகார் அளித்துள்ளார்.
இதை ெதாடர்ந்து சைல்டுலைன் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாணவி வீட்டுக்கு சென்று பெற்றோர் மற்றும் மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சென்று மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது பயிற்சியாளரின் அத்துமீறல் தெரியவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கலில் ரகுமானை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். கலில் ரகுமானுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதும், திருச்சியை சேர்ந்த இரண்டு குழந்தைக்கு தாயான பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
The post மாநில அளவில் வாலிபால் ஆட வைப்பதாக ஆசைகாட்டி பிளஸ் 2 மாணவியிடம் அத்துமீறல் பயிற்சியாளர் போக்சோவில் கைது: பயிற்சிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பதாக தானே புகார் செய்து சிக்கினார் appeared first on Dinakaran.