இதையடுத்து, தங்கவேல் டிராக்டரில் இருந்த மண்ணை அங்கேயை கொட்டிவிட்டு, ஜோதிலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும், டிராக்டரை தடுக்க முயன்ற ஜோதிலட்சுமி மீது டிராக்டரை மோதி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து ஜோதிலட்சுமி நேற்று சென்னிமலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தங்கவேல் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கடத்தலை தடுத்த ஆத்திரத்தால் தங்கவேல், ஜோதிலட்சுமி மீது டிராக்டரை மோதி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மணல் கடத்தலை தடுத்த பெண்ணை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: வீடியோ வைரல் appeared first on Dinakaran.