மூளைச்சாவு அடைந்த மறுவாழ்வு மைய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


புழல்: இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. புழல் காவாங்கரை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் ராஜசிங்கம் (41). கடந்த வாரம் சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலை காவாங்கரையில், சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். பின்னர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இவரது, உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்ய குடும்பத்தார் முன் வந்தனர்.

இதனையடுத்து அவரது உடல் புழலில் உள்ள இலங்கை அகதிகள் தமிழர் முகாமில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனையறிந்த மாதவரம் வட்டாட்சியர் விக்னேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இறந்துபோன இவருக்கு சர்மிளாதேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மூளைச்சாவு அடைந்த மறுவாழ்வு மைய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Related Stories: