இதனிடையே நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மே 29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மே 29, 30ல் மிக கனமழைக்கும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மே 29, 30ல் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி : நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.