ஆழ்கடலில் இருந்து எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதிக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீன் வளம் பாதிக்கப்படும் என்று மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கடல் வளத்தைக் கெடுக்கும் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இத்திட்டத்தை கைவிட செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

The post ஆழ்கடலில் இருந்து எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதிக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: