துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் வாகன அணிவகுப்பு ஒத்திகை

ஊட்டி, ஏப். 25: துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் வாகன அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகயைில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் மாநாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடக்கிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, ராஜ்பவன் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் துணை ஜனாதிபதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடக்கும் ராஜ்பவன் மாளிகைக்கு செல்கிறார். இதனை முன்னிட்டு நேற்று வாகன ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இருந்து தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கும், அங்கிருந்து ராஜ்பவன் மாளிகைக்கு வாகன ஒத்திகை காவல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வாகன ஒத்திகையின் போது, ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் இருந்து தீட்டுக்கல் வரையில் சாலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

The post துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் வாகன அணிவகுப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Related Stories: