ஆர்.கே.பேட்டை, ஏப்.24: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், காண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகன் திவாகரன்(16). இவர் கடந்த 21ம் தேதி தனது நண்பரான மாதேஷ்(17) என்பவருடன் ஆர்.கே.பேட்டைக்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். நாராயணபுரம் பாலம் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் திவாகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தில் படுகாயமடைந்த திவாகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post பைக் விபத்தில் இளைஞர் படுகாயம் appeared first on Dinakaran.