மலர் கண்காட்சிக்காக நடவு செய்த செடிகளில் மலர்கள் பூக்கத்துவங்கின

ஊட்டி, ஏப்.23: கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. பொதுவாக ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் பூக்கத்துவங்கிவிடும். ஆனால், இம்முறை மலர்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் சற்று பசுமை திரும்பியுள்ளது.

தற்போது பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளது. பெரும்பாலான தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள கேலண்டுள்ளா, பேன்சி, சால்வியா, டேலியா போன்ற மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். ஓரிரு நாட்களில் அனைத்து மலர் செடிகளிலும் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக, இந்த மலர்கள் பூத்துக் குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகளை செல்ல அனுமதிக்காத நிலையில், தொைலவில் இருந்தே மலர்களை கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.

The post மலர் கண்காட்சிக்காக நடவு செய்த செடிகளில் மலர்கள் பூக்கத்துவங்கின appeared first on Dinakaran.

Related Stories: