“மன்னா..”
“சொல்லுங்கள் நீதியரசரே?”
“உங்கள் தோட்டத்தில் இருந்து
கொஞ்சம் மண் வேண்டும்.”
“எவ்வளவு வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளுங்கள்.”
நீதிபதி இரண்டு மூன்று சாக்குப் பை களில் மண்ணை நிரப்பினார். பிறகு மன்னரை நோக்கி, “அரசே, இந்தச் சாக்குப் பையைத் தூக்கிக் கழுதையின் முதுகில் வைக்க உதவுங்கள்” என்றார்.மன்னர் அந்தச் சாக்குமூட்டையைத் தூக்க முயன்றார். ஊஹும்.. எவ்வளவு முயன்றும் அவரால் தூக்க முடியவில்லை. அவ்வளவு கனம்.நீதிபதி அமைதியாகக் கூறினார்- “அரசே, இந்த ஒரு மூட்டை மண்ணையே உங்களால் தூக்க முடியவில்லையே. ஓர் ஏழை மூதாட்டியிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையையும் தோட்டத்தையும் சுமக்கும்படி மறுமையில் இறைவன் கட்டளையிட்டால் என்ன செய்வீர்கள்? எப்படிச் சுமப்பீர்கள்?”நீதிபதி பின்வரும் வேத வசனத்தையும் ஓதிக் காட்டினார்.“எவர் வஞ்சனை செய்கிறாரோ அவர் மறுமை நாளில் தாம் செய்த வஞ்சனையுடன்தான் வருவார். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி முழுமையாக வழங்கப்படும். அவர்கள் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.”(குர்ஆன் 3: 161)மன்னரின் இதயம் இறையச்சத்தால் நடுங்கியது. உடனடியாக அந்த மூதாட்டி அங்கே வரவழைக்கப்பட்டார். மன்னர் கண்ணீருடன் கூறினார்.“அம்மா..என்னை மன்னித்து விடுங்கள். இந்த மாளிகை, தோட்டம் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்.”ஏழை எளியோர்களின், பலவீனமானவர்களின் சொத்துகளை அபகரிக்கும் போக்கு இன்றும் பரவலாக உள்ளது. சில அரசுகள் சட்டம் போட்டே நிலங்களை அபகரிக்கின்றன.இறைவனின் கடும் தண்டனைக்கு அவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்.
– சிராஜுல் ஹஸன்.
இந்த வாரச் சிந்தனை
“எது பாவமானதாகவும் வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். இறைவனை அஞ்சுங்கள். திண்ணமாக, அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது.” (குர்ஆன் 5:2)
The post அபகரித்தல் ஆபத்து..! appeared first on Dinakaran.