மேலும் விசாரணையில் புகார்தாரர் உணவகம் அமைக்க அனுமதி கோரிய போது பீமா சிம்மா நிலம் தொடர்பான ஆவனங்களை தனது உதவியாளரிடம் வழங்க கூறியுள்ளார். இதையடுத்து ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற போது அவர்கள் இருவரையும் சிபிஐ பொறி வைத்து கையும் களவுமாக பிடித்தது. கைது செய்த பின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணைக்கு பின் இருவரும் குற்றம் செய்தது நிருபிக்கப்பட்டு, அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டது.
The post தேசிய நெடுஞ்சாலை ஆணைய முன்னாள் திட்ட இயக்குநருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.